சாலையில் கிடந்த ரூ.50,000 பணம் - போலீசிடம் ஒப்படைத்த மூவரின் நேர்மையை பாராட்டிய மாநகர காவல் ஆணையர்...!

கோவை வெரைட்டி ஹால் சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.50,000 பணத்தை அவ்வழியாக சென்ற அன்பழகன், ஜெகன் மற்றும் செல்லபாண்டி ஆகியோர் மாநகர காவல் ஆணையாளரிடம் நேரடியாக ஒப்படைத்துள்ளனர்.

கோவை: கோவை வெரைட்டி ஹால் ரோடு அடுத்த தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு அருகே யாரோ ஒருவர் ரூ.50,000 பணத்தை தவற விட்டுச் சென்றுள்ளார்.

அப்போது, அவ்வழியாக சென்ற கோவைராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (42), கணுவாய் பகுதியைச் சேர்ந்த ஜெகன் (20) மற்றும் காளப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்லப்பாண்டி ஆகிய மூவரும் அவ்வழியாக சென்ற போது, கேட்பாரற்று கிடந்த பணத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.



இதனையடுத்து தவற விட்டவர்கள் எவராவது வருகிறார்களா..?என அந்த இடத்தில் காத்திருந்த மூவரும், யாரும் வராததால் பணத்தை கோவை மாநகர காவல் ஆணையாளரைநேரில் சந்தித்து ரூ.50,000 பணத்தை ஒப்படைத்துள்ளனர்.



இந்நிலையில், கீழே கிடந்த பணத்தை ஒப்படைத்த அன்பழகன், ஜெகன் மற்றும் செல்லபாண்டி ஆகியோரின் நேர்மையை பாராட்டிய காவல் ஆணையர், பணத்தை உரிய நபர்களிடம் ஒப்படைக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...