கோவை மாவட்ட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம், கோவை டைட்டில் சிட்டி லயன்ஸ் சங்கம், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை இணைந்து இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்தினர்.
கோவை: கோவை மாவட்ட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம், கோவை டைட்டில் சிட்டி லயன்ஸ் சங்கம், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை இணைந்து இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்தினர்.

சரவணம்பட்டி விளாங்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் கலையரங்கத்தில் இந்த சுயம்வர நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய மாவட்டங்களை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களுக்கான வரன்களை தேர்வு செய்தனர்.

இதில் தேர்வு செய்த ஜோடிகளுக்கு நவம்பர் 20ம் தேதி சென்னையில் ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது என்றும்ஒவ்வொரு ஜோடிகளுக்கும் 1.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசைகளும் வழங்கப்பட உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
மாற்றுத்திறனாளர்களுக்கான நடைபெறும் இந்த சுயம்வரம் 5 ஆவது முறைநடைபெறுவதாக தெடுவிக்கப்டுள்ளது.


சரவணம்பட்டி விளாங்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் கலையரங்கத்தில் இந்த சுயம்வர நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய மாவட்டங்களை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களுக்கான வரன்களை தேர்வு செய்தனர்.
இதில் தேர்வு செய்த ஜோடிகளுக்கு நவம்பர் 20ம் தேதி சென்னையில் ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது என்றும்ஒவ்வொரு ஜோடிகளுக்கும் 1.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசைகளும் வழங்கப்பட உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
மாற்றுத்திறனாளர்களுக்கான நடைபெறும் இந்த சுயம்வரம் 5 ஆவது முறைநடைபெறுவதாக தெடுவிக்கப்டுள்ளது.