மாவட்ட பா.ஜ.க.அரசு தொடர்பு பிரிவு சார்பில் சுதந்திர தின பேரணியும் காந்திபுரம், சிவானந்தாகாலனி, லட்சுமி மில்ஸ், போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தேசிய கொடிகளும் வழங்கினர்.
கோவை: 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக வீடுகள் தோறும் தேசிய கொடியேற்றி மக்கள் கொண்டாட வேண்டும் என பிரதமர்வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்ட பா.ஜ.க.சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பா.ஜ.க.அரசு தொடர்பு பிரிவு சார்பில் சுதந்திர தின பேரணி மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மாவட்ட பா.ஜ.க.அலுவலகத்தில் துவங்கிய பேரணியில் அரசு தொடர்பு பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பா.ஜ.க.மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார்.

பேரணியில் பா.ஜ.க.கலைச்சார பிரிவு சண்முகம் குழுவினர் பாரதமாதா, சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் பிரதமர் மோடி போன்று வேடமணிந்துவாகனங்களில் ஊர்வலமாக சென்றனர்.பா.ஜ.க.மாநில, மாவட்ட நிர்வாகிகளும் பேரணியாக சென்றனர்.
தொடர்ந்து காந்திபுரம், சிவானந்தாகாலனி, லட்சுமி மில்ஸ்,போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தேசிய கொடிகளையும் வழங்கினர்.