கோவையில் இரண்டு யானைகள் மோதல் – 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழப்பு….!

கோவை வனச்சரகம் துடியலூர் பிரிவு, ஆனைக்கட்டி தெற்கு அடர் வனப்பகுதியில் இரண்டு ஆண் யானைகள் சண்டையிட்டதில், ஒரு யானை தந்தத்தால் குத்திய காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. நாளை உடற்கூர் ஆய்வு நடைபெறும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை வனச்சரகம் துடியலூர் பிரிவு, ஆனைகட்டி தெற்கு அடர் வனப்பகுதியில் இரண்டு ஆண் யானைகள் சண்டையிட்டு கொண்டு இருப்பதாக, அங்கு ஆடு மேய்த்து கொண்டு இருந்த பொன்னுசாமி என்பவர் வனத்துறையினர் தகவல் அளித்துள்ளார்.

இதையடுத்து கோவை வனச்சரக வன ஊழியர்கள் மதியம் 2 மணியளவில் சென்று பார்த்தபோது, சண்டையில் ஏற்பட்ட காயங்களால் ஒரு ஆண் யானை காப்பு காட்டுக்குள்ளே எல்லையோரத்தில் தந்தத்தால் குத்திய காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு வன ஊழியர்கள் தகவல் அளித்தனர். இந்நிலையில், அங்கு வந்த வனச்சரகர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், சண்டையிட்ட மற்றொரு யானையின் உடல் நலம் அல்லது அது எங்கு உள்ளது..? என்பது குறித்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

முதற்கட்ட ஆய்வில், உயிரிழந்த ஆண் யானைக்கு 40 வயது இருக்கும் என்றும் நாளை (வெள்ளிக்கிழமை) பிரேத பரிசோதனை செய்ய உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...