குரங்கு அம்மை எதிரொலி: கேரளாவில் இருந்து வருவோரை பரிசோதனை செய்ய உத்தரவு - அதிகாரிகளின்றி வெறிச்சோடிய சோதனை சாவடிகள்..!

குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கையாக மாநில எல்லையில் சுகாதார ஆய்வாளர்களை பகல், இரவாக பணிக்கு அமர்த்தினாலும் சோதனைச் சாவடிகளில் யாரும் இல்லாததால் வாளையாறு சோதனை சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.



கோவை: குரங்கு அம்மை எதிரொலி காரணமாக, கேரளாவில் இருந்து வருவோரை பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்ட நிலையில், அதிகாரிகளின்றி சோதனை சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டது.



கொரோனா அலை ஓய்ந்த நிலையில், உலகையே அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டு வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் முதல் குரங்கு அம்மை பாதிப்பு கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், கேரளாவில் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை உறுதியானதால், தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதனால் கோவை - கேரள எல்லையான வாளையாறு உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் இரண்டு சுகாதார ஆய்வாளர்கள் கேரளாவில் இருந்து கோவை வரும் பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் குரங்கு அம்மை அறிகுறி உள்ளதா? என சோதனை செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



ஆனால், சில நேரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனையில் போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இல்லாததால், பெரும்பாலான வாகனங்கள் சோதனைக்கு நிற்பது இல்லை, மேலும்கேரளாவில் இருந்த வாகனங்கள் சர்வீஸ் சாலைக்கு திருப்பி விடாததால் நெடுஞ்சாலையில் செல்கிறது.

இந்நிலையில், குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கையாக மாநில எல்லையில் சுகாதார ஆய்வாளர்களை பகல், இரவாக பணிக்கு அமர்த்தினாலும் சோதனைச் சாவடிகளில் யாரும் இல்லாததால் வாளையாறு சோதனைச் சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.

உடனடியாக சுகாதாரத்துறை உத்தரவை மாவட்ட அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகிறது.



Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...