குரங்கு அம்மை எதிரொலி: கேரளாவில் இருந்து வருவோரை பரிசோதனை செய்ய உத்தரவு - அதிகாரிகளின்றி வெறிச்சோடிய சோதனை சாவடிகள்..!

குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கையாக மாநில எல்லையில் சுகாதார ஆய்வாளர்களை பகல், இரவாக பணிக்கு அமர்த்தினாலும் சோதனைச் சாவடிகளில் யாரும் இல்லாததால் வாளையாறு சோதனை சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.



கோவை: குரங்கு அம்மை எதிரொலி காரணமாக, கேரளாவில் இருந்து வருவோரை பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்ட நிலையில், அதிகாரிகளின்றி சோதனை சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டது.



கொரோனா அலை ஓய்ந்த நிலையில், உலகையே அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டு வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் முதல் குரங்கு அம்மை பாதிப்பு கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், கேரளாவில் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை உறுதியானதால், தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதனால் கோவை - கேரள எல்லையான வாளையாறு உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் இரண்டு சுகாதார ஆய்வாளர்கள் கேரளாவில் இருந்து கோவை வரும் பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் குரங்கு அம்மை அறிகுறி உள்ளதா? என சோதனை செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



ஆனால், சில நேரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனையில் போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இல்லாததால், பெரும்பாலான வாகனங்கள் சோதனைக்கு நிற்பது இல்லை, மேலும்கேரளாவில் இருந்த வாகனங்கள் சர்வீஸ் சாலைக்கு திருப்பி விடாததால் நெடுஞ்சாலையில் செல்கிறது.

இந்நிலையில், குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கையாக மாநில எல்லையில் சுகாதார ஆய்வாளர்களை பகல், இரவாக பணிக்கு அமர்த்தினாலும் சோதனைச் சாவடிகளில் யாரும் இல்லாததால் வாளையாறு சோதனைச் சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.

உடனடியாக சுகாதாரத்துறை உத்தரவை மாவட்ட அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகிறது.



Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...