விவசாயிகள் மற்றும் பொதுமக்களை இணை இயக்குனர் அவமதித்ததாக கூறி வெளியே வந்த விவசாயிகள் மனு நகலைக் கிழித்தெறிந்து கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளை சாபம் விட்டவாறு சென்றனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை அலுவலகத்தை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மனுவை வாங்காமல் எழுந்து சென்ற அதிகாரியால் விவசாயிகளை அதிருப்தி அடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் கோடங்கிபாளையம் இச்சிப்பட்டி ஆகிய பகுதிகளில் 34-கல் குவாரிகள் இயங்கி வருவதாகவும், இதனால் அப்பகுதியில் வாழக்கூடிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதோடு மட்டுமல்லாது கல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக அபாயகரமான வெடிபொருட்கள் வெடிக்க செய்வதால் அதிலிருந்து வரும் புகை மற்றும் அதிபயங்கர ஒளியால் அருகில் குடியிருக்கும் குடும்பங்களும் கால்நடைகளும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், மேலும், கல் குவாரிகளில் இருந்து வெளிவரும் நச்சுப் புகையால் நிலத்தடி நீர் மட்டுமல்லாது, அப்பகுதி நீர்நிலைகளும் மாசுபட்டு விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே கல் குவாரிகள் மீது சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கோடங்கி பாளையம் இச்சிப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தனர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கனிம வளத்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்க சென்ற போது மாவட்ட கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குனர் வள்ளலிடம் மனு அளிக்க முயன்ற போது விவசாயிகள் மற்றும் இணை இயக்குனரிடைய வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை அடுத்து, மனுவை வாங்க மறுத்த இணை இயக்குனர் விவசாயிகளை புறக்கணித்து அலுவலகத்திலிருந்து வெளியேறினார்.

இதனை கண்டிக்கும் வகையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் சமரச பேச்சுக்கு பின்பு மீண்டும் மனு அளிக்க சென்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்களை இணை இயக்குனர் அவமதித்ததாகக் கூறி வெளியே வந்த விவசாயிகள் மனு நகலைக் கிழித்தெறிந்து கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளை சாபம் விட்டவாறு சென்றனர்.

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் கோடங்கிபாளையம் இச்சிப்பட்டி ஆகிய பகுதிகளில் 34-கல் குவாரிகள் இயங்கி வருவதாகவும், இதனால் அப்பகுதியில் வாழக்கூடிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதோடு மட்டுமல்லாது கல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக அபாயகரமான வெடிபொருட்கள் வெடிக்க செய்வதால் அதிலிருந்து வரும் புகை மற்றும் அதிபயங்கர ஒளியால் அருகில் குடியிருக்கும் குடும்பங்களும் கால்நடைகளும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், மேலும், கல் குவாரிகளில் இருந்து வெளிவரும் நச்சுப் புகையால் நிலத்தடி நீர் மட்டுமல்லாது, அப்பகுதி நீர்நிலைகளும் மாசுபட்டு விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே கல் குவாரிகள் மீது சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கோடங்கி பாளையம் இச்சிப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கனிம வளத்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்க சென்ற போது மாவட்ட கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குனர் வள்ளலிடம் மனு அளிக்க முயன்ற போது விவசாயிகள் மற்றும் இணை இயக்குனரிடைய வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை அடுத்து, மனுவை வாங்க மறுத்த இணை இயக்குனர் விவசாயிகளை புறக்கணித்து அலுவலகத்திலிருந்து வெளியேறினார்.
இதனை கண்டிக்கும் வகையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் சமரச பேச்சுக்கு பின்பு மீண்டும் மனு அளிக்க சென்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்களை இணை இயக்குனர் அவமதித்ததாகக் கூறி வெளியே வந்த விவசாயிகள் மனு நகலைக் கிழித்தெறிந்து கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளை சாபம் விட்டவாறு சென்றனர்.
இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.