மாநில அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்(எஸ்சி,எஸ்டி) நல ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து கோவை மக்களுக்கு தெரியப்படுத்த கோரி சமூக நீதிக்கட்சி சார்பில் அதன் தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்களவை உறுப்பினர் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.
கோவை: மாநில அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்(எஸ்சி,எஸ்டி) நல ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து கோவை மக்களுக்கு தெரியப்படுத்த கோரி சமூக நீதிக்கட்சி சார்பில் அதன் தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்களவை உறுப்பினர் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.
அந்த மனுவில் தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்பெற்று நீதியரசர் சிவக்குமார் தலைமையில் சென்னை தாட்கோ அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.
ஒன்றிய அரசின் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மட்டுமே மக்களுக்கு அறியப்படுகிறது. மாநில அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் செயல்பாடுகள், கோவை மக்களுக்கு தெரியப்படுத்த கோரியும், கோவையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் அறிமுக கூட்டம், கோவையில் நடத்த கோரியும், சமூக நீதி கட்சி தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார், அந்த கோரிக்கை மனுவை அவர் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மக்களவை உறுப்பினர் நடராஜன் ஆகியோரிடம் கொடுத்தார்.
அந்த மனுவில் தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்பெற்று நீதியரசர் சிவக்குமார் தலைமையில் சென்னை தாட்கோ அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.
ஒன்றிய அரசின் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மட்டுமே மக்களுக்கு அறியப்படுகிறது. மாநில அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் செயல்பாடுகள், கோவை மக்களுக்கு தெரியப்படுத்த கோரியும், கோவையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் அறிமுக கூட்டம், கோவையில் நடத்த கோரியும், சமூக நீதி கட்சி தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார், அந்த கோரிக்கை மனுவை அவர் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மக்களவை உறுப்பினர் நடராஜன் ஆகியோரிடம் கொடுத்தார்.