கோவையில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றின் சுவரின் மீது மோதி விபத்து – தூக்கி வீசப்பட்டு கிணற்றில் விழுந்த இளம்பெண் உயிரிழப்பு..!

தீயணைப்புத் துறையினர் கிணற்றில் சடலமாக இருந்த இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றின் சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், தூக்கி வீசப்பட்டு கிணற்றில் விழுந்த இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சூலூர் பச்சார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து, இவரது மனைவி தமிழ்செல்வி, இவர்களுக்கு திருமணம் ஆகி சபிதா (18) என்ற மகளும், சந்தோஷ் (12) என்ற மகனும் உள்ளனர்.

மேலும், நாச்சிமுத்து தேங்காய் லோடு ஏற்றும் வேலை செய்து வருகிறார். தமிழ்செல்வி மற்றும் அவரது மகள் சபிதா இருவரும் சுல்தான் பேட்டையில் உள்ள சுரேஷ் என்பவரது தேங்காய் மண்டியில் தேங்காய் உடைக்கும் வேலை செய்து வந்தனர்.

மேலும் தமிழ்செல்வி, சபிதா இருவரும் வழக்கமாக தங்களது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து வேலைக்குச் சென்று வந்தனர். இந்நிலையில், இன்று காலை 7-மணியளவில் வழக்கம் போல தமிழ்செல்வியும் மகள் சபிதாவும் இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுள்ளனர்.

அப்போது சபிதா வாகனத்தை ஓட்டியுள்ளார். அப்போது பச்சார்பாளையம் – பொள்ளாச்சி, பல்லடம் மெயின் ரோட்டில் வந்துள்ளனர். நல்ல தண்ணீர் தோட்டம் அருகே வந்த போது அங்கிருந்த வளைவில் திரும்பியுள்ளனர். வேகமாக வந்ததால் பின்னால் அமர்ந்திருந்த தமிழ்செல்வி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் அங்கிருந்த கிணற்றின் சுவர் மீது மோதி சபிதா அங்கிருந்த 80 அடி கிணற்றுக்குள் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து, தமிழ்ச்செல்வி சத்தம் போடவே அங்கிருந்தவர்கள் வந்து பார்த்த போது கிணற்றிற்குள் சபிதா விழுந்தது தெரியவந்தது.



இதையடுத்து சுல்தான் பேட்டை போலீஸ் மற்றும் சூலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி கிணற்றில் சடலமாக இருந்த சபிதா உடலை மீட்டனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...