குளங்களில் டீசல் படகுகள் செலுத்துவதால் மீன்கள் உயிரிழக்க கூடும்-கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு..!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உள்ள உக்கடம் பெரியகுளம், வாளாங்குளம் ஆகிய இரு குளங்களிலும் டீசல் படகுகள் செலுத்துவதால் மீன்கள் உயிரிழக்க கூடும் என கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உள்ள குளங்களில் டீசல் படகுகள் செலுத்துவதால் மீன்கள் உயிரிழக்க கூடும் என கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



அவர்கள் அளித்த மனுவில், கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு மீன்வள உதவி இயக்குநர் ஒதுக்கீட்டின் படி, 2019-2023 வரை 11 குளங்களை தந்துள்ளீர்கள். நாங்கள் மீன் குஞ்சு இருப்பு செய்து மீன்பிடித்து வருகிறோம்.



இந்த குளங்களை நம்பி 500-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. தற்போது குளங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், வாளாங்குளம் ஆகிய இரு குளங்களிலும் டீசல் படகுகள் விடுவதற்காக பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

நாங்கள் பெடல் படகுகள் விடுவதாக எண்ணினோம் தற்போது டீசல் படகுகள் விடுவதால் குளத்தில் உள்ள மீன்களுக்கு டீசல் மற்றும் பெட்ரோல் வாசம் வரும், இதனால் குளங்களில் டீசல், பெட்ரோல் படகுகள் விடுவதை தவிர்க்கவும் என குறிப்பிட்டிருந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலத்தில் உள்ள ஏரியில் டீசல் படகுகள் பயன்படுத்தியதால் தான் டீசல் வாசத்தினால் மீன்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்த அவர்கள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...