கோவையில் வங்கியில் பணம் போடுவதாக கூறி, பெண்ணிடம் ரூ.15-லட்சம் மோசடி - மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை..!

இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் வங்கி மேலாளரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் வங்கியில் பணம் போடுவதாக கூறி, பெண்ணிடம் ரூ.15-லட்சம் மோசடி செய்த தனியார் வங்கி மேலாளரை பிடித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ராணி(49). அதே பகுதியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (45). இவர்கள் இருவரும் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் என்பதால் தோழிகளாக பழகி வந்தனர்.

ராணி தனது வீட்டில் ரூ.15-லட்சம் வைத்திருந்தார். இதனை அறிந்த பாக்கியலட்சுமி அவரிடம் சென்று, எதற்கு இவ்வளவு பணத்தை கையில் வைத்துள்ளீர்கள் என்று கேட்டதாக தெரிகிறது. அப்போது ராணி சில ஆண்டுகள் கழித்து தனது மகள் திருமணத்திற்கு தேவைப்படும், அதற்காகவும், தனது மருத்துவ செலவிற்காகவும் வைத்துள்ளேன் என்று கூறினார்.

அதற்கு பாக்கியலட்சுமி, எனது மகன் சதுரகிரி வேதகிரிநாதன்(35) தனியார் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருகிறார். அவரின் வங்கியில் பணத்தை செலுத்தி விடலாம். அவ்வாறு செலுத்தினால் திருமண காலம் வரும் வரை அதிக வட்டி கிடைக்கும் என்று தெரிவித்தார்.

இதனை நம்பி ராணி, அவரிடம் ரூ.15-லட்சத்தை கொடுத்தார். சில ஆண்டுகள் கழித்து ராணி, பாக்கியலட்சுமியிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். அப்போது அவர் தந்துவிடுவதாக கூறி நாட்களை கடத்தி வந்தார். ஆனால் இதுவரை அவர் பணத்தை திருப்பி தரவில்லை.

அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராணி, இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதுரகிரி வேதகிரிநாதனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...