வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற நெகமம் போலீசார், உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் பொறியியல் பட்டதாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் காளியப்பன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சபரி கார்த்தி(27). கடந்த 2018-ஆம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பொறியியல் படிப்பு முடித்து உள்ளார்.
இந்நிலையில், பல ஆண்டுகளாக அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால், கடந்த சில நாட்களாக அவர் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற நெகமம் போலீசார், சபரி கார்த்திக்கின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் காளியப்பன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சபரி கார்த்தி(27). கடந்த 2018-ஆம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பொறியியல் படிப்பு முடித்து உள்ளார்.
இந்நிலையில், பல ஆண்டுகளாக அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால், கடந்த சில நாட்களாக அவர் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற நெகமம் போலீசார், சபரி கார்த்திக்கின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.