கோவை தனியார் பள்ளியில் கோல் போஸ்ட் சரிந்து விபத்து - 7 வயது சிறுமி படுகாயம் - பள்ளி இயக்குனர் உட்பட 5 பேர் மீது வழக்கு…!

கோவை செயல்பட்டு வரும் ராக்ஸ் பள்ளிக்கூடம் (Rak's Pallikkoodam) என்ற பள்ளியில், கடந்த 22ம் தேதி 7 வயது சிறுமி மீது கோல் போஸ்ட் சரிந்து விழுந்ததில், சிறுமிக்கு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளார். சம்பவம் தொடர்பாக, பள்ளியின் நிர்வாக இயக்குனர் உட்பட 5 பேர் மீது பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவை பீளமேடு பகுதியில் உள்ள "ரேக்ஸ் பள்ளிக்கூடம்" (RAKS Pallikoodam) என்ற ஐ.சி.எஸ்.சி பள்ளியில் கோல் போஸ்ட் சரிந்து விழுந்ததில் 7 வயது சிறுமி படுகாயம் அடைந்து தனியார்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து தொடர்பாக பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மீது பீளமேடு காவல் நிலையத்தில் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை பீளமேடு பகுதியில் ரேக்ஸ் பள்ளிக்கூடம்என்ற ஐ.சி.எஸ்.சி பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளி வளாகத்தில் கடந்த 22ம் தேதி மதியம் சுமார் 1 மணியளவில் 7 வயது சிறுமி குஷிபாக்மர் என்பவர் சக குழந்தைகளோடுவிளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்போது மைதானத்தில் இருந்தகோல் போஸ்ட்டில் தோங்கிய படி விளையாடிய போது, கோல் போஸ்ட்சரிந்து விழுந்தது. இதில், சிறுமி குஷிபாக்மர் தலையில் பலத்த காயம் அடைந்து மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், விபத்து தொடர்பாக சிறுமியின் தந்தை ஹேமந்த்குமார் பாக்மர்கொடுத்த புகாரின் பேரில், பள்ளியின் நிர்வாக இயக்குனர் சுவேதா கிருஷ்ணமூர்த்தி, முதல்வர் ரூடால்ப், ஆசிரியை அமரீஸ்வரி, விளையாட்டு ஆசிரியர்கள் சீனிவாசன், பரத் ஆகிய 5 பேர் மீது பீளமேடு போலீசார்வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தனி நபருக்கு கொடுங்காயம் ஏற்படுத்துதல் மற்றும் சிறார் பாதுகாப்பு சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...