திருப்பூரில் பள்ளி மாணவ - மாணவிகள் பிரம்மாண்ட செஸ் மேடை அமைத்து செஸ் உருவங்களாக தங்களை மாற்றி விழிப்புணர்வு..!

திருப்பூரில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ-மாணவிகள் பிரம்மாண்ட செஸ் மேடை அமைத்து செஸ் உருவங்களாக தங்களை மாற்றி செஸ் விளையாடி பார்ப்போரின் கவனத்தை ஈர்த்தனர்.



திருப்பூர்: திருப்பூரில் பள்ளி மாணவ மாணவிகள் பிரம்மாண்ட செஸ் மேடை அமைத்து செஸ் உருவங்களாக தங்களை மாற்றி செஸ் விளையாடி பார்ப்போரின் கவனத்தை ஈர்த்தனர்.



சென்னை மாமல்லபுரத்தில் வருகின்ற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது.



செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவ-மாணவிகள் மூலம் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி வரக்கூடிய சூழ்நிலையில், திருப்பூர் மாவட்டம் பழங்கரையில் உள்ள தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் பிரம்மாண்ட செஸ் மேடை அமைத்து செஸ் உருவங்களாக தங்களை மாற்றிக் கொண்டு செஸ் விளையாட்டின் விதிமுறைகள் படி கருப்பு வெள்ளை கட்டங்களில் நகர்ந்து நூதன விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இது பார்ப்போரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...