செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் உக்கடம் பெரிய குளம் I LOVE KOVAI-ல் செஸ் போர்டு போன்று கருப்பு வெள்ளை வண்ணங்கள் மாற்றப்பட்டுள்ளது பொது மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
கோவை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி கோவையில், உக்கடம் பெரிய குளம் I LOVE KOVAI- கருப்பு வெள்ளை வண்ணங்கள் மாற்றப்பட்டுள்ளது பொது மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்குகிறது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக உக்கடம் பெரிய குளம் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் வடிவமைக்கப்பட்ட I LOVE KOVAI என்ற வண்ண வண்ண எழுத்துக்களில் செஸ் போர்டு வண்ணங்கள் தற்போது மாற்றப்பட்டுள்ளது.
உக்கடம் பெரிய குளம் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீர் படுத்தப்பட்டு நடைபாதை, பூங்கா, குழந்தைகள் விளையாட்டு பூங்கா ஆகியவை ஏற்படுத்தப்பட்டன. அங்கு வைக்கப்பட்டிருந்த I LOVE KOVAI என்ற எழுத்துகள் மக்கள் கோவை மக்கள் பலரையும் கவர்ந்தது.
மாலை நேரங்களில் அதில் வண்ண வண்ண ஒளிகள் ஒளியூட்டப்படுவது குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரையும் கவர்ந்தது. தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் செஸ் போர்டு போன்ற கருப்பு வெள்ளை வண்ணங்கள் மாற்றப்பட்டுள்ளது பொது மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்குகிறது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக உக்கடம் பெரிய குளம் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் வடிவமைக்கப்பட்ட I LOVE KOVAI என்ற வண்ண வண்ண எழுத்துக்களில் செஸ் போர்டு வண்ணங்கள் தற்போது மாற்றப்பட்டுள்ளது.
உக்கடம் பெரிய குளம் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீர் படுத்தப்பட்டு நடைபாதை, பூங்கா, குழந்தைகள் விளையாட்டு பூங்கா ஆகியவை ஏற்படுத்தப்பட்டன. அங்கு வைக்கப்பட்டிருந்த I LOVE KOVAI என்ற எழுத்துகள் மக்கள் கோவை மக்கள் பலரையும் கவர்ந்தது.
மாலை நேரங்களில் அதில் வண்ண வண்ண ஒளிகள் ஒளியூட்டப்படுவது குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரையும் கவர்ந்தது. தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் செஸ் போர்டு போன்ற கருப்பு வெள்ளை வண்ணங்கள் மாற்றப்பட்டுள்ளது பொது மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.