கோவையில் கஞ்சா கடத்தல் திண்டுக்கல் இளைஞர்கள் 3-பேர் கைது - 28 கிலோ கஞ்சா மற்றும் ரூ.3 லட்சம் பணம் பறிமுதல்..!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சுமார் 28 கிலோ கஞ்சா பொட்டலங்களுடன் நின்றிருந்த திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்து, கஞ்சாவை விற்பனைக்காக கொடுத்து அனுப்பிய திண்டுக்கலை சேர்ந்த இருவரையும் கைது செய்தனர்.


கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சுமார் 28 கிலோ கஞ்சா பொட்டலங்களுடன் நின்றிருந்த திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கோவை மாநகரில் கஞ்சா விற்பனையை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் சாதாரண உடையில் கோவை காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையத்தில் போலீசார் காத்திருந்தனர். அப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வந்த பேருந்தில் வந்த இளைஞர் ஒருவரை மடக்கி பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனை செய்த போது அவர் வைத்திருந்த பையில் சுமார் 28 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டங்களும், ரூ.3 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சா மற்றும் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை எடுத்து வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் என்பவரை கைது செய்தனர். பிரவீனிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், கஞ்சாவை விற்பனைக்காக கொடுத்து அனுப்பிய திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தர்மராஜ் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து கோவை அழைத்து வந்தனர். இதையடுத்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...