ஆக., 5-ம் தேதி கோவையில் இருந்து சீரடிக்கு மீண்டும் தனியார் ரயில் இயக்கப்பட உள்ளது. ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு www.southstarrail.com என்ற இணையதளத்தில் துவங்கியுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு, 1800-210-2991 என்ற எண்ணில் அழைக்கலாம்.
கோவை: ஆக., 5-ம் தேதி கோவையில் இருந்து ஷீரடிக்கு மீண்டும் தனியார் ரயில் இயக்கப்பட உள்ளது. மத்திய அரசின் 'பாரத் கவுரவ்' திட்டத்தின் கீழ், தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் ரயில் இயக்க ஒப்புதல் வழங்கப்படுகிறது.
கடந்த, ஜூன் 13-ம் தேதி நாட்டிலேயே முதன் முறையாக, கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், ஆந்திரா, மந்திராலயம் வழியாக ஷீரடிக்கு, தனியார் ரயில் 'சவுத் ஸ்டார்' என்ற நிறுவனம் வாயிலாக இயக்கப்பட்டது. பயணிகள் வரவேற்பை தொடர்ந்து, மீண்டும் ஆக., 5-ம் தேதி கோவையில் இருந்து சீரடி ரயில் இயக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு www.southstarrail.com என்ற இணையதளத்தில் துவங்கியுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு, 1800 210 2991 என்ற எண்ணில் அழைக்கலாம். ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'கோவை மட்டுமின்றி சென்னையில் இருந்து ராமேஸ்வரம், திருச்செந்தூர், சபரிமலை உட்பட பகுதிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பாரத் கவுரவ் திட்டத்தில் தனியார் ரயில் இயக்கப்பட உள்ளது. அறிவிப்பு விரைவில் வெளியாகும்' என்றனர்.
கடந்த, ஜூன் 13-ம் தேதி நாட்டிலேயே முதன் முறையாக, கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், ஆந்திரா, மந்திராலயம் வழியாக ஷீரடிக்கு, தனியார் ரயில் 'சவுத் ஸ்டார்' என்ற நிறுவனம் வாயிலாக இயக்கப்பட்டது. பயணிகள் வரவேற்பை தொடர்ந்து, மீண்டும் ஆக., 5-ம் தேதி கோவையில் இருந்து சீரடி ரயில் இயக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு www.southstarrail.com என்ற இணையதளத்தில் துவங்கியுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு, 1800 210 2991 என்ற எண்ணில் அழைக்கலாம். ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'கோவை மட்டுமின்றி சென்னையில் இருந்து ராமேஸ்வரம், திருச்செந்தூர், சபரிமலை உட்பட பகுதிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பாரத் கவுரவ் திட்டத்தில் தனியார் ரயில் இயக்கப்பட உள்ளது. அறிவிப்பு விரைவில் வெளியாகும்' என்றனர்.