கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் 'COSIEMA' சார்பில், தொழிற்பேட்டை வளாகத்தில் செயல்படும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் 3,000-தொழிலாளர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
கோவை: கோவை 'சிட்கோ தொழிற்பேட்டையில் 3,000-தொழிலாளர்களுக்கு 'கோவிட்-19' பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
கோவை மாவட்ட நிர்வாகம், மாவட்ட பொது சுகாதாரத்துறை, தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் 'சிட்கோ',மாவட்ட தொழில் மையம் மற்றும் 'COSIEMA' சங்கம் சார்பில் நடந்த முகாமை 'சிட்கோ' கிளை மேலாளர் ஷர்மிளா, மாவட்ட தொழில் மைய மேலாளர் திருமுருகன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.
'COSIEMA' தலைவர் நல்லதம்பி,செயலாளர் லோகநாதன், தமிழ்நாடு சிறு, குறு தொழில்கள் சங்கம் 'TANSTIA' துணைத் தலைவர் சுருளிவேல் உள்ளிட்டோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் செயல்படும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் 3,000 தொழிலாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் நாளில் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
எதிர்வரும் நாட்களில் நடக்கும் சிறப்பு முகாமில் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.