கோவை பொள்ளாச்சி சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு..!

செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு சதுரங்க விளையாட்டு அட்டையில் உள்ள வெள்ளை கருப்பு நிற வர்ணங்கள் பூசும் பணி நடைபெற்று வருகிறது.


கோவை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு சதுரங்க விளையாட்டு அட்டையில் உள்ளது போல் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்க உள்ளன. இந்த போட்டிகளில் 186-நாடுகளைச் சேர்ந்த, 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

செஸ் ஒலிம்பியார் போட்டி குறித்து பொள்ளாச்சியில் வருவாய் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த, போட்டி குறித்த பேனர்கள், பொது போக்குவரத்து வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் அதிகம் வந்து செல்லும் பேருந்து நிலைய சாலையில் அமைந்துள்ள, சார் ஆட்சியர் அலுவலக வளாக சுற்றுச்சுவருக்கு, செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சதுரங்க விளையாட்டு அட்டையில் உள்ள வெள்ளை கருப்பு நிற வர்ணங்கள் பூசும் பணி நடைபெற்று வருகிறது.



இதே போல 'தம்பி மஸ்கட் லோகோ' உடன் செல்பி எடுத்துக் கொள்ளும் வகையில் உருவ பொம்மை புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...