செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு சதுரங்க விளையாட்டு அட்டையில் உள்ள வெள்ளை கருப்பு நிற வர்ணங்கள் பூசும் பணி நடைபெற்று வருகிறது.
கோவை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு சதுரங்க விளையாட்டு அட்டையில் உள்ளது போல் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்க உள்ளன. இந்த போட்டிகளில் 186-நாடுகளைச் சேர்ந்த, 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
செஸ் ஒலிம்பியார் போட்டி குறித்து பொள்ளாச்சியில் வருவாய் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த, போட்டி குறித்த பேனர்கள், பொது போக்குவரத்து வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மக்கள் அதிகம் வந்து செல்லும் பேருந்து நிலைய சாலையில் அமைந்துள்ள, சார் ஆட்சியர் அலுவலக வளாக சுற்றுச்சுவருக்கு, செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சதுரங்க விளையாட்டு அட்டையில் உள்ள வெள்ளை கருப்பு நிற வர்ணங்கள் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

இதே போல 'தம்பி மஸ்கட் லோகோ' உடன் செல்பி எடுத்துக் கொள்ளும் வகையில் உருவ பொம்மை புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்க உள்ளன. இந்த போட்டிகளில் 186-நாடுகளைச் சேர்ந்த, 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
செஸ் ஒலிம்பியார் போட்டி குறித்து பொள்ளாச்சியில் வருவாய் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த, போட்டி குறித்த பேனர்கள், பொது போக்குவரத்து வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மக்கள் அதிகம் வந்து செல்லும் பேருந்து நிலைய சாலையில் அமைந்துள்ள, சார் ஆட்சியர் அலுவலக வளாக சுற்றுச்சுவருக்கு, செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சதுரங்க விளையாட்டு அட்டையில் உள்ள வெள்ளை கருப்பு நிற வர்ணங்கள் பூசும் பணி நடைபெற்று வருகிறது.
இதே போல 'தம்பி மஸ்கட் லோகோ' உடன் செல்பி எடுத்துக் கொள்ளும் வகையில் உருவ பொம்மை புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.