75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருப்பூர் ரயில் நிலையத்திற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தியாகி திருப்பூர் குமரன் ரயில் நிலையம் என பெயர் சூட்டப்பட்டு பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருப்பூர் ரயில் நிலையத்திற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தியாகி திருப்பூர் குமரன் ரயில் நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின விழா வருகின்ற ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள சூழ்நிலையில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ரயில்வே நிர்வாகம் சார்பில் திருப்பூர் ரயில் நிலையத்திற்கு தற்காலிகமாகத் திருப்பூரைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தியாகி திருப்பூர் குமரன் ரயில் நிலையம் என பெயர் சூட்டப்பட்டு திருப்பூர் ரயில் நிலையத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர் குமரன் நினைவை போற்றும் வகையில் ரயில் நிலைய வளாகத்தில் திருப்பூர் குமரன் புகைப்பட கண்காட்சி மற்றும் செல்பி பூத் அமைக்கப்பட்டுள்ளது.