பறிமுதல் செய்யப்பட்ட 1600-கிலோ ரேஷன் அரிசி, கடத்தல் வாகனம் மற்றும் வாகனத்தை இயக்கி வந்த நபரையும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள பாரமடையூர், ரெட்டியாரூர், அர்த்தநாரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆழியாறு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த டாடா சுமோ காரை நிறுத்தி சோதனை செய்து வண்டியில் 17 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
மேலும், கார இயக்கி வந்த பொள்ளாச்சி சேர்ந்த மாதேஸ்வரன் என்பவரை விசாரணை மேற்கொண்டதில், மேலும் சில ரேஷன் அரிசி மூட்டைகள், ரெட்டியார் மடம் அருகே இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கிருந்து 17-மூட்டைகளிலிருந்து ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 1600-கிலோ ரேஷன் அரிசி, கடத்தல் வாகனம் மற்றும் வாகனத்தை இயக்கி வந்த நபரையும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.