கோவை அரசு பொருட்காட்சி வளாகத்தில் பாதுகாப்பு பணியின் போது, துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற ஆயுதப்படை காவலர் காளிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை: கோவையில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட ஆயுதப்படை காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (23). கோவை ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கோவை ஜெயில் மைதானத்தில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சி மைதானத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு திடீரென துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டுள்ளது.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அங்கு சென்று பார்த்த போது காளிமுத்து வயிற்றில் குண்டு பாய்ந்து இரத்தத்துடன் வெளியே வந்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்த அரசு ஊழியர்கள் காளிமுத்துவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து கோவை மாநகர ஆணையாளர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், தடயவியல் துறை அதிகாரிகள் தடயங்களை சேகரித்தனர். முதல் கட்ட விசாரணையில் காளிமுத்து தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
வயிற்றுப் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த ஆயுதப்படை காவலருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (23). கோவை ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கோவை ஜெயில் மைதானத்தில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சி மைதானத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு திடீரென துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டுள்ளது.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அங்கு சென்று பார்த்த போது காளிமுத்து வயிற்றில் குண்டு பாய்ந்து இரத்தத்துடன் வெளியே வந்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்த அரசு ஊழியர்கள் காளிமுத்துவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து கோவை மாநகர ஆணையாளர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், தடயவியல் துறை அதிகாரிகள் தடயங்களை சேகரித்தனர். முதல் கட்ட விசாரணையில் காளிமுத்து தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
வயிற்றுப் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த ஆயுதப்படை காவலருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.