கோவை கிராஸ்கட் வீதியில் திடீரென வடமாநில இளைஞர் ஒருவர் சாலையில் சாவகாசமாக படுத்து கொண்டு "பாரத் மாதா கி ஜே" என முழக்கமிட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோவை: "பாரத் மாதா கி ஜே" என குடிபோதையில் சாலையில் படுத்து கொண்டு ரகளையில் ஈடுபட்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை கிராஸ்கட் வீதியில் நேற்று இரவு திடீரென வடமாநில இளைஞர் ஒருவர் சாலையில் படுத்து கொண்டு "பாரத் மாதா கி ஜே" என முழக்கமிட்டு சாவகாசமாகப் படுத்துக் கொண்டார். இதனால் போக்குவரத்துநெரிசல் ஏற்பட்டது.
வாகன ஓட்டிகள் ஹாரன் அடித்தும் எழுந்து செல்லும்படி கூறியும் அந்த இளைஞர் எழுந்து செல்லாததால் அங்கிருந்த தனியார் நிறுவனங்களின் பாதுகாவலர்கள் அந்த நபரை எழுப்ப முயன்றனர். அப்போது அவர் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது.
பின்னர் இளைஞரை எழுப்பிய தனியார் நிறுவன பாதுகாவலர்களும், பொதுமக்களும் வடமாநில இளைஞரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.