கோவை பொள்ளாச்சி அருகே போலி சுகாதார ஆய்வாளர் கைது..!

பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன் புதூரில் இறைச்சி கடைகளில் வசூல் வேட்டை நடத்திய, போலி சுகாதார ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே கோழி கடையில் லஞ்சம் பெற்ற போலி சுகாதார ஆய்வாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன் புதூர் அழுக்கு சாமியார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தர்மராஜ்(22) அதே பகுதியில் கோழி கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று கடையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, கடைக்கு வந்த நபர் ஒருவர் தன்னை சுகாதார ஆய்வாளர் என்று கூறியுள்ளார்.

மேலும், கோழி கடையில் விதிமுறைகளைப் பின்பற்றாமல் உள்ளதாகவும், அதற்கு கடை சீல் வைக்க போவதாகவும் கூறியதாக தெரிகிறது. பின்னர் அவரிடம் ரூ.2500 அபராத தொகையை செலுத்துமாறு கூறியுள்ளார்.

அதற்கு தர்மராஜ் ரூ.500 மட்டும் கொடுத்து அதற்கு ரசித்து கேட்டுள்ளார். அதற்குள் அந்த நபர் கடையிலிருந்து தப்பி ஓடி உள்ளார். பின்னர், தர்மராஜ் அவரது நண்பர்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து ஆனைமலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

போலீசார் விசாரணையில், அவர் பழனி அருகே அண்ணா நகர் பகுதியை சேர்ந்த குருநாதன்(32) என்பது தெரியவந்தது. மேலும், அவர் தர்மராஜிடம் தன்னை சுகாதாரத்துறை அதிகாரி என்று கூறி ஏமாற்றியதும் தெரிய வந்தது. இதையடுத்து தர்மராஜ் கொடுத்த புகாரின் பேரில் குருநாதன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...