வார்டு எண்.67 க்குட்பட்ட சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
கோவை: கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 'நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்' சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.67 க்குட்பட்ட சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து 100 அடி சாலையில் மீண்டும் மஞ்சள் பை வழங்கும் பணியை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கிய பின்னர்,

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.67 க்குட்பட்ட சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை வகைப்படுத்தி பிரிப்பதற்கான இருவகை குப்பைத்தொட்டிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் வழங்கினார்.

மேலும், கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.67 க்குட்பட்ட சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில், தூய்மை தூதுவர் அடையாள பேட்ச்களை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் தூய்மை தூதுவர்களுக்கு வழங்கினார்.

பின்னர், கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.67 க்குட்பட்ட சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் மேயர் கல்பனா ஆனந்தகுமார், தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் முன்னிலையில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற தூய்மை உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா, மத்திய மண்டல தலைவர் மினாலோகு, பொதுசுகாதாரக் குழுத்தலைவர் பெ.மாரிச்செல்வன், பணிக்குழு தலைவர் சாந்தி முருகன், மாமன்ற உறுப்பினர்கள் பிரபா ரவீந்திரன், வித்யா, நகர்நல அலுவலர் பிரதீப் வா.கிருஷ்ணகுமார், உதவி நகர் நல அலுவலர் மரு ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் சந்திரன், முருகன், ஜெரால்டு சத்ய புனிதன், தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.