கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீண்ட நாட்களாக அடைக்கப்பட்டிருந்த கழிவுநீர் தொட்டியில் இருந்த கழிவுகள் அகற்றம்..!

நீண்ட நாட்களாக கழிவுநீர் தொட்டியில் கழிவுகள் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசி வந்த நிலையில் கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தற்போது கழிவுநீர் தொட்டியில் இருந்து கழிவுகளை அகற்றினர்.


கோவை: ஆட்சியர் அலுவலகத்தில் நீண்ட நாட்களாக அடைக்கப்பட்டிருந்த கழிவுநீர் தொட்டியில் இருந்து கழிவுகள் அகற்றப்பட்டது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய கட்டிடம் பின்புறம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு அருகில் கழிவுநீர் தொட்டி உள்ளது. நீண்ட நாட்களாக கழிவுநீர் தொட்டியில் கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதால் கழிவுகள் தேங்கி கழிவு நீர் வெளியேறி வாகனம் நிறுத்துமிடம் நடக்கும் பாதைகளில் தேங்கி துர்நாற்றம் வீசி வந்தது.

மழை காலங்களிலும் மழை பெய்யும் நாட்களில் மழை நீரோடு இந்த கழிவு நீரும் சேர்ந்து நடைபாதையில் தேங்கி நிற்கும். இதுகுறித்து பலமுறை ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களும் அரசு அலுவலர்களும் வாய் வழியாக புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அக்கழிவு நீர் தொட்டியில் இருந்து கழிவுகளை அகற்றினர். நீண்ட நாட்களாக கழிவுநீர் தொட்டியில் கழிவுகள் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசி வந்த நிலையில் தற்போது கழிவுநீர் தொட்டியில் இருந்து கழிவுகள் அகற்றப்பட்டது நிம்மதியை அளித்துள்ளது.



மேலும், இது போன்று அடிக்கடி கழிவுநீர் தொட்டியில் தேங்கும் கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...