ஜூலை 15 ஆம் தேதி முதல்வர் பங்கேற்க இருந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தி.மு.க. சார்பிலான பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோவை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜூலை 15-ந் தேதி ஆம் தேதி கோவை கொடிசியாவில் நடைபெறும் வேளாண் கண்காட்சியை பார்வையிடுவதுடன், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் கலந்துகொள்ள முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, அவர் நாளை (ஜூலை 14) மாலை கோவை வருவதாக இருந்தது.
நேற்று முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் வருகையையொட்டி,பொள்ளாச்சியில் தி.மு.க. சார்பில் நடைபெற இருந்த பொதுக் கூட்டத்திலும் பங்கேற்பதாக இருந்தது. இதையடுத்து, அதற்கான ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மும்முரமாக செய்து வந்தனர்.
பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிக்கு, கால்கோள் நடப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உடல் சோர்வு, காய்ச்சல் அறிகுறி இருந்ததை அடுத்து,நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவரது கோவை வருகை மற்றும் கோவையில் பங்கேற்க இருந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தி.மு.க. சார்பிலான பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குணமடைந்த பிறகு, முதல்வரின் கோவை நிகழ்ச்சிகள் குறித்த தேதி அறிவிக்கப்படும் என தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இது குறித்து தி.மு.க நிர்வாகிகள் கூறுகையில், முதல்-அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் 14, 15-ல் அவர் கோவையில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும், என்றனர்
நேற்று முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் வருகையையொட்டி,பொள்ளாச்சியில் தி.மு.க. சார்பில் நடைபெற இருந்த பொதுக் கூட்டத்திலும் பங்கேற்பதாக இருந்தது. இதையடுத்து, அதற்கான ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மும்முரமாக செய்து வந்தனர்.
பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிக்கு, கால்கோள் நடப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உடல் சோர்வு, காய்ச்சல் அறிகுறி இருந்ததை அடுத்து,நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவரது கோவை வருகை மற்றும் கோவையில் பங்கேற்க இருந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தி.மு.க. சார்பிலான பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குணமடைந்த பிறகு, முதல்வரின் கோவை நிகழ்ச்சிகள் குறித்த தேதி அறிவிக்கப்படும் என தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இது குறித்து தி.மு.க நிர்வாகிகள் கூறுகையில், முதல்-அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் 14, 15-ல் அவர் கோவையில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும், என்றனர்