அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7100-கன அடி ஆகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் மூன்று மதகு வழியாக 1070-கனஅடியாகவும், மொத்தம் 5470-கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கோவை: வால்பாறையில் இடைவிடாமல் பெய்யும் கனமழையால் சோலையாறு அணை நிரம்பியது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில்சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சோலையாறு அணை கிடுகிடுவென்று உயர்ந்தது.
நேற்று காலையிலிருந்து மிக கனமழை பெய்து வந்ததால் சோலையாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7100-கனஅடியாக தண்ணீர் வந்தது இதையடுத்து, சோலையாறு அணை 165-அடிக்கு 164-அடி நிரம்பியது.
அணையின் பாதுகாப்பு கருதி அணை திறக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7100-கன அடி ஆகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் மூன்று மதகு வழியாக 1070-கனஅடியாகவும், சேடல் பகுதி வழியாக 4400-கனஅடியாகவும், மொத்தம் 5470-கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.