கோவை 25-வது வார்டு காந்திமா நகர் காவல் நிலையம் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் பெரிய கழிவு நீர் ஓடை செல்வதை அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை: குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் ஓடை செல்வதை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை 25-வது வார்டு காந்திமா நகர் காவல் நிலையம் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் பெரிய கழிவு நீர் ஓடை செல்வதை அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுகுறித்து நகர அமைப்பாளர் தகவல் தொழில்நுட்ப அணி பால மணிகண்டன் கூறுகையில், அப்பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வரும் கழிவு நீர் ஓடையில் கலப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாகவும், திடக்கழிவுகளால் ஓடை நீர் செல்வதற்கு வழி இல்லாமல் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதாகவும், இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் முதல்வர் செல்லுக்கு புகார் அளித்தும் சிங்காநல்லூர் பாதாள சாக்கடை பணிகள் முடிந்ததும், இதனை அத்துடன் இணைத்து விடுவோம் என பதில் அளிப்பதாகக் கூறிய அவர் தற்காலிக நடவடிக்கையாவது எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கோவை 25-வது வார்டு காந்திமா நகர் காவல் நிலையம் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் பெரிய கழிவு நீர் ஓடை செல்வதை அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து நகர அமைப்பாளர் தகவல் தொழில்நுட்ப அணி பால மணிகண்டன் கூறுகையில், அப்பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வரும் கழிவு நீர் ஓடையில் கலப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாகவும், திடக்கழிவுகளால் ஓடை நீர் செல்வதற்கு வழி இல்லாமல் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதாகவும், இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் முதல்வர் செல்லுக்கு புகார் அளித்தும் சிங்காநல்லூர் பாதாள சாக்கடை பணிகள் முடிந்ததும், இதனை அத்துடன் இணைத்து விடுவோம் என பதில் அளிப்பதாகக் கூறிய அவர் தற்காலிக நடவடிக்கையாவது எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.