எஸ்.பி.வேலுமணி உதவியாளரின் சகோதரரும், வடவள்ளி சந்திரசேகர் வீட்டில் பணியாற்றி வந்த வசந்தகுமார் என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை குனியமுத்தூர் அடுத்த மைல்கல் பகுதியில் உள்ளவசந்தகுமார் என்பவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.இவர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பரும், நமது அம்மா நாளிதழ் பதிப்பாளருமான வடவள்ளி சந்திரசேகர் வீடு மற்றும் அலுவலகங்களில், மூன்று நாட்கள் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, சந்திரசேகரின் நண்பரும், கே.சி.பி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரபிரகாஷ் வீட்டில் 3 ஆவது நாளாகவும்,அலுவலகத்தில் 5 ஆவது நாளாகாவும் வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வடவள்ளி சந்திரசேகர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் வசந்தகுமார் வீட்டில் நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு வந்த போது, அதிமுக நிர்வாகிகள் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வடவள்ளி சந்திரசேகர், சந்திரபிரகாஷ் வீடு அலுவலகங்களில் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு ஆவணங்கள் கைபற்றிப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது எஸ்.பி.வேலுமணி உதவியாளரின் சகோதரரும், வடவள்ளி சந்திரசேகர் வீட்டில் பணியாற்றி வந்த வசந்தகுமார் வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பரும், நமது அம்மா நாளிதழ் பதிப்பாளருமான வடவள்ளி சந்திரசேகர் வீடு மற்றும் அலுவலகங்களில், மூன்று நாட்கள் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, சந்திரசேகரின் நண்பரும், கே.சி.பி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரபிரகாஷ் வீட்டில் 3 ஆவது நாளாகவும்,அலுவலகத்தில் 5 ஆவது நாளாகாவும் வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வடவள்ளி சந்திரசேகர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் வசந்தகுமார் வீட்டில் நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு வந்த போது, அதிமுக நிர்வாகிகள் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வடவள்ளி சந்திரசேகர், சந்திரபிரகாஷ் வீடு அலுவலகங்களில் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு ஆவணங்கள் கைபற்றிப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது எஸ்.பி.வேலுமணி உதவியாளரின் சகோதரரும், வடவள்ளி சந்திரசேகர் வீட்டில் பணியாற்றி வந்த வசந்தகுமார் வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.