ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்க வேண்டும் - கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

கோவையில் இயங்கி வரும் ஈஷா யோகா மையத்தை அரசுடைமையாக்க வேண்டும், பெண்களை துறவிகளாக மாற்றக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தந்தை பெரியார் திராவிட கழகம், தெய்வத் தமிழ் பேரவை உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.


கோவை: கோவையில் இயங்கி வரும் ஈஷா யோகா மையத்தை அரசுடைமையாக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிட கழகம், தெய்வத் தமிழ் பேரவை உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.



கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஈஷா அறக்கட்டளையை அரசுடைமை ஆக்க வேண்டும், அங்கிருந்து வெளியேறும் கழிவுநீரை விளை நிலத்தில் வெளியேற்றக் கூடாது, பழங்குடியினர் நில அபகரிப்பு, பெண்களைத் துறவிகள் ஆக்கக் கூடாது என்று பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இப்போராட்டத்தில், ஈஷாவில் பணிபுரியும் பெண்களின் குடும்பத்தார் சிலர் பங்கேற்றனர். அவர்கள், ஈஷாவில் துறவிகளாக உள்ள பெண்களை வெளியேற்றும் படிவலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிகழ்வில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், தெய்வத் தமிழ் பேரவை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மண்வளப் பாதுகாப்பை வலியுறுத்தி 100 நாட்களில் 27 நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்ட ஈஷா நிறுவனர் சத்குரு, இன்று ஜூன் 21-ம் தேதி கோவை திரும்ப உள்ள நிலையில்,நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...