பொள்ளாச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட பொதுக்குழு கூட்டம்..!

ஊராட்சி செயலாளர்களின் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என பொள்ளாச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


கோவை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட பொதுக்குழு கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, உள்ளிட்டபல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட அச்சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது,



தமிழகத்தில் பெரிய ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களைஇரண்டாக பிரிக்க வேண்டும், வருவாய்த் துறையில் புதிய வட்டாட்சியர் அலுவலகங்கள் தோற்றுவிப்பது போல், ஊரக வளர்ச்சித் துறையில் நிர்வாக வசதிக்காக புதியஊராட்சி ஒன்றியங்கள் துவக்கப்பட வேண்டும்.

ஊராட்சி ஒன்றியங்களில் மத்திய அரசின் திட்டங்களான மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம், ஜல் ஜீவன், உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த, வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

ஊராட்சி செயலாளர்களின்பல ஆண்டுகள்கோரிக்கையான கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். தமிழகத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள பணியிடங்களைத் தமிழக அரசு உடனடியாக நியமிக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...