மாணவர் போராட்டத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை வேண்டும்- அன்புமணி இராமதாஸ்


மாணவர் போராட்டத்தில் கலவரம் நடந்தது தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும், அதற்காக பா.ம.க நீதிமன்றம் செல்லும் எனவும் அக்கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பா.ம.க மாநில இளைஞரணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பாரதியார் பல்கலைகழகம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு வருகை தந்தார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தார். 

தமிழ்நாடு முழுவதும் அமைதியாக நடந்த மாணவர் போராட்டத்திற்கு கலங்கம் ஏற்படுத்த காவல் துறையினர் திட்டமிட்டு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி இருப்பதாகவும், சென்னையில் நடந்த கலவரத்திற்கு காவல் துறை தான் காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டினார். 

மேலும், ஆளும் கட்சிக்குள் உள்ள பிரச்சனைகளை மறைக்க இந்த தாக்குதல் நடந்து இருக்கலாம் எனவும், காவல் துறையினரே ஆட்டோ, குடிசை, வாகனங்களை கொளுத்தும் காட்சிகள் வெளியாகி இருப்பதாகவும், சமூக விரோதிகள் கலவரத்தை தூண்டி விட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

மேலும், கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் அல்லது சி.பி.ஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளியாகும் எனவும் கூறிய அவர், அதற்காக பா.ம.க நீதிமன்றம் செல்லும் என தெரிவித்தார். 

கோவையை பொருத்த வரை அத்திக்கடவு- அவிநாசி, பண்டியாறு- புன்னம்புழா மற்றும் அட்டப்பாடியில் கேரள அரசு அணைக்கட்டுதல் ஆகிய 3 பிரச்சனைகள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் நீர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டியது அவசியம் என தெரிவித்தார். 

மத்திய பா.ஜ.க அரசு அடுத்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கர்நாடக அரசிற்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். 

பவானி ஆற்றில் கேரள அரசு அணைக்கட்டுதல், காவிரி  பிரச்சனை உள்ளிட்ட நதிநீர் பிரச்சனைகளுக்கு அனைத்து கட்சி கூட்டங்களை கூட்டி, பிரதமரை சந்தித்து அழுத்தம் தந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

Newsletter

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...