விரைவு ரயில்களை தனியாருக்கு விற்பதை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்..!

கோவை ரயில் நிலையம் நுழைவாயில் முன்பு விரைவு ரயில்களை தனியாருக்கு அளிப்பதை கண்டித்து சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் கருப்பு தின ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: விரைவு ரயில்களை தனியாருக்கு விற்பதை கண்டித்து கோவையில் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை முதல் சீரடி வரை துவக்கப்பட்டுள்ள ரயிலை தனியாருக்கு அளித்ததைத் திரும்பப் பெற வேண்டும், டெல்லி நேப்பாள் ரயிலை ஐஆர்சிடிசிக்கு விற்றதை வாபஸ் பெற வேண்டும், பாரத் கௌரவ் என்ற பெயரில் 100 விரைவு ரயில்களை தனியாருக்கு அளிக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்த யூனியனை சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மத்திய அரசிடமும் ரயில்வே அமைச்சகத்திடம் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...