நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜக நிர்வாகிகளை யு.எ.பி.எ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பொள்ளாச்சியில் தெரிவித்துள்ளார்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவருமான ஜவாஹிருல்லா கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

இதை தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுப்பூர் ஷர்மா மற்றும் டெல்லி ஊடகப் பிரிவு தலைவர் நவீன் ஜிந்தா ஆகியோரை யு.எ.பி.எ(UAPA) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
பாஜக அரசு யு.எ.பி.எ சட்டத்தை இஸ்லாமியர்கள் மீது மட்டுமே பயன்படுத்தி உள்ளது. நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசி மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையிலும், கலவரத்தைத் தூண்டும் வகையிலும் பேசிய பாஜக நிர்வாகிகள் நுப்பூர் சர்மா மற்றும் நவீன் ஜிந்தா ஆகிய இருவரும் தான் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்ய முழு தகுதி உடையவர்கள் என்று தெரிவித்தார்.
வன்முறையைத் தூண்டும் வகையில் நடந்து கொண்ட பாஜகவைச் சேர்ந்த இருவர் யு.எ.பி.எ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்த ஜவாஹிருல்லா, பாஜக அரசு சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானவர்கள் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவருமான ஜவாஹிருல்லா கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
இதை தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுப்பூர் ஷர்மா மற்றும் டெல்லி ஊடகப் பிரிவு தலைவர் நவீன் ஜிந்தா ஆகியோரை யு.எ.பி.எ(UAPA) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
பாஜக அரசு யு.எ.பி.எ சட்டத்தை இஸ்லாமியர்கள் மீது மட்டுமே பயன்படுத்தி உள்ளது. நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசி மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையிலும், கலவரத்தைத் தூண்டும் வகையிலும் பேசிய பாஜக நிர்வாகிகள் நுப்பூர் சர்மா மற்றும் நவீன் ஜிந்தா ஆகிய இருவரும் தான் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்ய முழு தகுதி உடையவர்கள் என்று தெரிவித்தார்.
வன்முறையைத் தூண்டும் வகையில் நடந்து கொண்ட பாஜகவைச் சேர்ந்த இருவர் யு.எ.பி.எ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்த ஜவாஹிருல்லா, பாஜக அரசு சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானவர்கள் என்றும் தெரிவித்தார்.