நபிகள் நாயகம் சர்ச்சை: பாஜக நிர்வாகிகளை UAPA சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேட்டி..!

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜக நிர்வாகிகளை யு.எ.பி.எ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பொள்ளாச்சியில் தெரிவித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவருமான ஜவாஹிருல்லா கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.



இதை தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுப்பூர் ஷர்மா மற்றும் டெல்லி ஊடகப் பிரிவு தலைவர் நவீன் ஜிந்தா ஆகியோரை யு.எ.பி.எ(UAPA) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

பாஜக அரசு யு.எ.பி.எ சட்டத்தை இஸ்லாமியர்கள் மீது மட்டுமே பயன்படுத்தி உள்ளது. நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசி மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையிலும், கலவரத்தைத் தூண்டும் வகையிலும் பேசிய பாஜக நிர்வாகிகள் நுப்பூர் சர்மா மற்றும் நவீன் ஜிந்தா ஆகிய இருவரும் தான் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்ய முழு தகுதி உடையவர்கள் என்று தெரிவித்தார்.

வன்முறையைத் தூண்டும் வகையில் நடந்து கொண்ட பாஜகவைச் சேர்ந்த இருவர் யு.எ.பி.எ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்த ஜவாஹிருல்லா, பாஜக அரசு சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானவர்கள் என்றும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...