விடுதலைப் போரை நினைவு படுத்தி, வரலாற்றை மீட்கும் மாநாட்டை நாளை (ஜூன் 12), கோவை காந்திபுரம் பகுதியில் முன்னெடுக்க இருப்பதாக தெரிவித்தார்.
கோவை: விடுதலை போரை நினைவு படுத்தி, வரலாற்றை மீட்கும் மாநாடு கோவையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் கிபி 1800-ல், கோவையில் இருந்த கோட்டை, வெள்ளையர்களின் ஆதிக்கத்தில் இருந்தது, இதன் மூலம் தமிழகம், கேரளா, கர்நாடகா என அனைத்து பகுதிகளிலும், எழுந்த புரட்சியாளர்களின் எதிர்ப்பை வெள்ளையர்கள், உளவு பார்த்து அழித்து வந்தனர் என தெரிவித்தார்.
கொலை, கொள்ளை, வரி விதிப்பு என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிய நாம், வெள்ளையர்களை விரட்ட மக்கள் தங்களது உயிரையும் கொடுக்க தயாராக இருந்து வந்தனர் என்றும் இதன் ஒரு பகுதியாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட போரில் 42 பேர் வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு, கோவையில் பல்வேறு பகுதிகளில், சித்திரவதை செய்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த 42 பேரில் பல்வேறு சமூகத்தைச், மதத்தைச் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்றும், ஜாதி மதம் பாராமல், நடைபெற்ற இந்த போர் இந்திய வரலாற்றில் பதிவு செய்ய பட்டிருக்க வேண்டும் என தெரிவித்தார்.
அப்படியான ஒரு முயற்சியை முன்னெடுக்கும் வகையில் நாளை (ஜூன் 12), கோவை காந்திபுரம் பகுதியில் ஒரு மாநாட்டை முன்னெடுக்க இருப்பதாக தெரிவித்தார்.

இந்த மாநாட்டில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த முத்தரசன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு இராமகிருட்டிணன், தமுமுக ஜவாஹிருல்லா உட்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் கிபி 1800-ல், கோவையில் இருந்த கோட்டை, வெள்ளையர்களின் ஆதிக்கத்தில் இருந்தது, இதன் மூலம் தமிழகம், கேரளா, கர்நாடகா என அனைத்து பகுதிகளிலும், எழுந்த புரட்சியாளர்களின் எதிர்ப்பை வெள்ளையர்கள், உளவு பார்த்து அழித்து வந்தனர் என தெரிவித்தார்.
கொலை, கொள்ளை, வரி விதிப்பு என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிய நாம், வெள்ளையர்களை விரட்ட மக்கள் தங்களது உயிரையும் கொடுக்க தயாராக இருந்து வந்தனர் என்றும் இதன் ஒரு பகுதியாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட போரில் 42 பேர் வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு, கோவையில் பல்வேறு பகுதிகளில், சித்திரவதை செய்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த 42 பேரில் பல்வேறு சமூகத்தைச், மதத்தைச் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்றும், ஜாதி மதம் பாராமல், நடைபெற்ற இந்த போர் இந்திய வரலாற்றில் பதிவு செய்ய பட்டிருக்க வேண்டும் என தெரிவித்தார்.
அப்படியான ஒரு முயற்சியை முன்னெடுக்கும் வகையில் நாளை (ஜூன் 12), கோவை காந்திபுரம் பகுதியில் ஒரு மாநாட்டை முன்னெடுக்க இருப்பதாக தெரிவித்தார்.
இந்த மாநாட்டில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த முத்தரசன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு இராமகிருட்டிணன், தமுமுக ஜவாஹிருல்லா உட்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.