கோவையில் விடுதலை போரை நினைவு படுத்தி, வரலாற்றை மீட்கும் மாநாடு - மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு முருகன் காந்தி..!

விடுதலைப் போரை நினைவு படுத்தி, வரலாற்றை மீட்கும் மாநாட்டை நாளை (ஜூன் 12), கோவை காந்திபுரம் பகுதியில் முன்னெடுக்க இருப்பதாக தெரிவித்தார்.


கோவை: விடுதலை போரை நினைவு படுத்தி, வரலாற்றை மீட்கும் மாநாடு கோவையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது பேசிய அவர் கிபி 1800-ல், கோவையில் இருந்த கோட்டை, வெள்ளையர்களின் ஆதிக்கத்தில் இருந்தது, இதன் மூலம் தமிழகம், கேரளா, கர்நாடகா என அனைத்து பகுதிகளிலும், எழுந்த புரட்சியாளர்களின் எதிர்ப்பை வெள்ளையர்கள், உளவு பார்த்து அழித்து வந்தனர் என தெரிவித்தார்.

கொலை, கொள்ளை, வரி விதிப்பு என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிய நாம், வெள்ளையர்களை விரட்ட மக்கள் தங்களது உயிரையும் கொடுக்க தயாராக இருந்து வந்தனர் என்றும் இதன் ஒரு பகுதியாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட போரில் 42 பேர் வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு, கோவையில் பல்வேறு பகுதிகளில், சித்திரவதை செய்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த 42 பேரில் பல்வேறு சமூகத்தைச், மதத்தைச் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்றும், ஜாதி மதம் பாராமல், நடைபெற்ற இந்த போர் இந்திய வரலாற்றில் பதிவு செய்ய பட்டிருக்க வேண்டும் என தெரிவித்தார்.

அப்படியான ஒரு முயற்சியை முன்னெடுக்கும் வகையில் நாளை (ஜூன் 12), கோவை காந்திபுரம் பகுதியில் ஒரு மாநாட்டை முன்னெடுக்க இருப்பதாக தெரிவித்தார்.



இந்த மாநாட்டில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த முத்தரசன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு இராமகிருட்டிணன், தமுமுக ஜவாஹிருல்லா உட்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...