கோவை TNAU-வில்‌ பழப்பயிர்கள்‌ துறையில்‌ பட்டியலின வகுப்பினருக்கான தொழில்நுட்ப செயல்‌ விளக்க திடல்‌..!

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ பழப்பயிர்கள்‌ துறையில்‌ தொழில்நுட்ப செயல்‌ விளக்க திடல்‌ அகில இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்‌ கழகத்தின்‌ உதவியுடன்‌ கடந்த மூன்று வருடங்களாக பட்டியலின வகுப்பினருக்கான (SCSP) நடைபெற்று வருகிறது.


திருப்பூர்‌: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ பழப்பயிர்கள்‌ துறையில்‌ தொழில்நுட்ப செயல்‌ விளக்க திடல்‌ அகில இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்‌ கழகத்தின்‌ உதவியுடன்‌ கடந்த மூன்று வருடங்களாக பட்டியலின வகுப்பினருக்கான (SCSP) நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தில்‌ வாழை மற்றும்‌ பப்பாளியில்‌ உயர்‌ விளைச்சல்‌ தரும்‌ உயிரிய தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்குத் தெரியப்படுத்தும்‌ நோக்கில்‌ ஒவ்வொரு வருடமும்‌ ஐந்து விவசாயிகள்‌ தேர்வு செய்யப்பட்டு, தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான இடுபொருட்கள்‌ இலவசமாகக் கொடுக்கப்பட்டு பின்‌, செயல்‌ விளக்கம்‌ விவசாயிகளின்‌ வயல்களில்‌ நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

வாழை மற்றும்‌ உயர்‌ விளைச்சலுக்கான ஒருங்கிணைந்த உர மற்றும்‌ நீர்‌ மேலாண்மை, களை மேலாண்மை, வாழைத்தாருக்கு உறையிடல்‌, வாழை இலைச்சருகு நோய்‌ மேலாண்மை, பப்பாளி வளைய புள்ளி, நச்சுயிரி நோய்‌ மேலாண்மை போன்ற தொழில்நுட்பங்கள்‌ திருப்பூர்‌, கோபி மற்றும்‌ மேட்டுப்பாளையம்‌ பகுதிகளில்‌ செயல்படுத்தப்பட்டன.

இந்த வருடம்‌ திருப்பூர்‌ மாவட்டம்‌ குன்னத்தூரில்‌ செயல்விளக்க திடல்கள்‌ நடைபெற்று வருகிறது. இதுவரை குறைந்த பட்சம்‌ 150 விவசாயிகள்‌ இதில்‌ கலந்து கொண்டு தொழில்நுட்பங்களை அறிந்துள்ளனர்‌.

இப்பயிற்சியில்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக பழப்பயிர்கள்‌ துறை பேராசியர்‌ மற்றும்‌ தலைவர்‌ ஜே.அக்ஸீலியா இணைப்‌ பேராசிரியர்‌ பேராசிரியர்‌ சூக. மனோரஞ்சிதம்‌ மற்றும்‌ உதவிப்‌ பேராசிரியர்‌ சி.கவிதா மற்றும்‌ க.பா. சுஜாதா ஆகியோர்‌ கலந்து கொண்டு தொழில்நுட்ப உரைகளை வழங்கினர்‌.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...