கோவை சேத்துமடை அருகே விஷப் பாம்பு கடித்து 4-வயது சிறுவன் உயிரிழப்பு..!

தோட்டத்தில் விளையாடிக் கொண்டு இருந்தபோது, சிறுவனின் கால் கட்டை விரலில் விஷப் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: சேத்துமடை அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்தார்.

கோவை பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை அன்னப்பாறை மன்னம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (40). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் ஹரினேஷ் (4).

சிறுவன் நேற்று மாலை வீட்டின் அருகே இருந்த தோட்டத்தில் விளையாடிக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது கீழே கிடந்த பந்தை எடுக்க சென்றபோது, அங்கிருந்த விஷப் பாம்பு ஒன்று ஹரினேஷ் கால் கட்டை விரலில் கடித்ததாக தெரிகிறது.

இதில் சிறுவன் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...