கோவை குனியமுத்தூர் அருகே தனியார் கல்லூரி மாணவர்களிடையே மோதல்; தடுக்கச் சென்ற போலீஸ் மீது தாக்குதல்…!

மோதலில் ஈடுபட்ட மாணவர்களை தடுக்க முயன்ற குனியமுத்தூர் காவல் நிலைய தலைமை காவலர் திருநாவுக்கரசை தாக்கி விட்டு தப்பிச் சென்ற மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூர் பகுதியில், தனியார் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்ற காவலரை தாக்கிவிட்டு தப்பிய மாணவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கோவை குனியமுத்தூரை அடுத்த கோவைப்புதூர் பகுதியில் நேற்றிரவு தனியார் கல்லூரி இறுதி ஆண்டு படித்து வந்த மாணவர்கள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இது குறித்து, அங்கிருந்த பொதுமக்கள் குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, அங்கு வந்த உதவி ஆய்வாளர் சின்ராஜ் மற்றும் தலைமை காவலர் திருநாவுக்கரசு ஆகியோர் அங்கு வந்து, மோதிக்கொண்ட மாணவர்களை தடுக்க முயன்றனர்.

அப்போது, தப்ப முயன்ற மாணவர்கள் தலைமை காவலர் திருநாவுக்கரசை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீஸார் தப்பிச் சென்ற மாணவர்களை தேடி வருகின்றனர். தற்போது, தனியார் கல்லூரி மாணவர்கள் 4 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...