மோதலில் ஈடுபட்ட மாணவர்களை தடுக்க முயன்ற குனியமுத்தூர் காவல் நிலைய தலைமை காவலர் திருநாவுக்கரசை தாக்கி விட்டு தப்பிச் சென்ற மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவை குனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூர் பகுதியில், தனியார் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்ற காவலரை தாக்கிவிட்டு தப்பிய மாணவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவை குனியமுத்தூரை அடுத்த கோவைப்புதூர் பகுதியில் நேற்றிரவு தனியார் கல்லூரி இறுதி ஆண்டு படித்து வந்த மாணவர்கள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இது குறித்து, அங்கிருந்த பொதுமக்கள் குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, அங்கு வந்த உதவி ஆய்வாளர் சின்ராஜ் மற்றும் தலைமை காவலர் திருநாவுக்கரசு ஆகியோர் அங்கு வந்து, மோதிக்கொண்ட மாணவர்களை தடுக்க முயன்றனர்.
அப்போது, தப்ப முயன்ற மாணவர்கள் தலைமை காவலர் திருநாவுக்கரசை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீஸார் தப்பிச் சென்ற மாணவர்களை தேடி வருகின்றனர். தற்போது, தனியார் கல்லூரி மாணவர்கள் 4 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை குனியமுத்தூரை அடுத்த கோவைப்புதூர் பகுதியில் நேற்றிரவு தனியார் கல்லூரி இறுதி ஆண்டு படித்து வந்த மாணவர்கள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இது குறித்து, அங்கிருந்த பொதுமக்கள் குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, அங்கு வந்த உதவி ஆய்வாளர் சின்ராஜ் மற்றும் தலைமை காவலர் திருநாவுக்கரசு ஆகியோர் அங்கு வந்து, மோதிக்கொண்ட மாணவர்களை தடுக்க முயன்றனர்.
அப்போது, தப்ப முயன்ற மாணவர்கள் தலைமை காவலர் திருநாவுக்கரசை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீஸார் தப்பிச் சென்ற மாணவர்களை தேடி வருகின்றனர். தற்போது, தனியார் கல்லூரி மாணவர்கள் 4 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.