இந்திய அளவில் உணவு பாதுகாப்பு தர வரிசை பட்டியல் வெளியீடு - தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை…!

பெரிய மாநிலங்களுக்கான தர வரிசையில், தமிழகம் முதல் முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 18 மதிப்பெண்கள் கூடுதலாக பெற்று முதல் இடம் பிடித்து தமிழகம் சாதனை படைத்துள்ளது.


கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7-ம் தேதி உலக உணவு பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு "பாதுகாப்பான உணவே சிறந்த ஆரோக்கியம்“ என்ற தலைப்பில் உணவு பாதுக்காப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும்உணவுப் பாதுகாப்பு தினத்தையோட்டி, இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் இந்திய அளவில் உணவு பாதுகாப்பு தர வரிசையை வெளியிடும். இதன்படி 2022 ஆம் ஆண்டுக்கான உணவு பாதுகாப்பு தரவரிசையை மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம்வெளியிடப்பட்டுள்ளது.

இதில், தமிழகம் முதல் முறையாக முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.5 நிலைகளில் உணவுப் பாதுகாப்பு துறையின் செயல்பாடு ஆய்வு செய்யப்பட்டு இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு தொடர்பாக பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை, உணவுப் பாதுகாப்பு துறையிடம் உரிய அனுமதி பெறுபவர்களின் எண்ணிக்கை, உணவு சோதனை மற்றும் தொடர் ஆய்வுகள், உணவுப் பாதுகாப்பு தொடர்பாக துறை அலுவலர்களுக்கு பயிற்சி, நுகர்வோரின் பங்களிப்பு உள்ளிட்ட 5 நிலைகளில் ஆய்வு செய்து இந்த தரவரிசை வெளியிடப்படுகிறது.

இதில், பெரிய மாநிலங்கள் பட்டியலில் கடந்த ஆண்டு கேரளா முதலிடம் பிடித்த நிலையில் இந்த ஆண்டு தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

குஜராத் 2-வது இடமும், மகாராஷ்டிரா 3வது இடமும் பிடித்துள்ளது. முதல் இடத்தில் பிடித்த தமிழ்நாடு 82, குஜராத் 77.5, மகாராஷ்டிரா 70புள்ளிகளையும் பெற்றுள்ளது.



பல்வேறு அளவு கோள்களில்,மாநிலத்தின் ஒட்டுமொத்த

செயல்திறனைப் பாராட்டி, பெரிய மாநிலங்களில் முதல் இடத்தைப் பிடித்ததற்காக, நேற்று, ஜூன் 7ம் தேதி, மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர், மன்சுக் மாண்டவியா, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு ஆணையர் மற்றும் சிறப்புப் பணி அதிகாரியான, பி.செந்தில்குமாருக்கு, விருதை வழங்கினார்.



அதே போல, சிறிய மாநிலங்கள் பட்டியலில் கோவா முதலிடமும், மணிப்பூர் 2வது இடமும், சிக்கிம் 3வது இடமும் பிடித்துள்ளது. யூனியன் பிரதேசங்களின் பட்டியலில், ஜம்மு-காஷ்மீர் முதலிடமும், டெல்லி 2வது இடமும், சண்டிகர் 3வது இடமும் பிடித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 18 மதிப்பெண்கள் கூடுதலாக பெற்று முதல் இடம் பிடித்து தமிழகம் சாதனை படைத்துள்ளது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...