திருப்பூரில் மேற்கொள்ளப்படும் அரசு திட்டப்பணிகள் குறித்து சட்டப்பேரவை பொது கணக்கு குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து இந்த ஆய்வு குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
திருப்பூர்: திருப்பூரில் மேற்கொள்ளப்படும் அரசு திட்டப்பணிகள் குறித்து சட்டப்பேரவை பொது கணக்கு குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து இந்த ஆய்வு குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

திருப்பூரில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகள் குறித்து சட்டப்பேரவை பொது கணக்கு குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.

பின்னர் இந்த ஆய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

ஆய்வுக் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை, மத்திய பொது கணக்கு குழு தணிக்கை செய்து கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் துறை வாரியாக இன்று திருப்பூரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வின் அடிப்படையில் இங்கு நடத்தப்பட்ட கூட்டத்தில் 33 தலைப்புகளில் (துறைகளில்) கேள்விகள் கேட்கப்பட்டது. தெளிவான விளக்கங்கள் அளிக்காத ஒரு சில துறை அதிகாரிகளை வரும் 16ஆம் தேதி சென்னைக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2017-18ம் ஆண்டுகளில் வெள்ளகோவில் நகராட்சி நிதியை வங்கி கணக்கில் இருப்பு வைக்கும் போது டெபாசிட் செய்து வைக்காமல் சேமிப்பு கணக்கில் வைத்துள்ளனர். இதன் காரணமாக சுமார் 10 லட்சம் வரையிலான வட்டி இழப்பானது அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து முறையான விளக்கம் அளிக்கும்படி நகராட்சி ஆணையரை வரும் 16ம் தேதி சென்னைக்கு வர உத்தரவிட்டுள்ளோம். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெண்களுக்கான விடுதி கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதில் முறையான சுற்றுச்சுவர் கட்டப்படாமல் உள்ளது. மேலும் அந்த விடுதியில் குறைந்த அளவிலான பெண்கள் இருந்து வருகின்றனர். அந்த விடுதி அங்கு கட்டப்பட வேண்டிய அவசியமே இல்லை என்றும் இதற்காக ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் செலவு செய்து அங்கு விடுதி கட்டப்பட்டுள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
திருப்பூரில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகள் குறித்து சட்டப்பேரவை பொது கணக்கு குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.
பின்னர் இந்த ஆய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
ஆய்வுக் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை, மத்திய பொது கணக்கு குழு தணிக்கை செய்து கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் துறை வாரியாக இன்று திருப்பூரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வின் அடிப்படையில் இங்கு நடத்தப்பட்ட கூட்டத்தில் 33 தலைப்புகளில் (துறைகளில்) கேள்விகள் கேட்கப்பட்டது. தெளிவான விளக்கங்கள் அளிக்காத ஒரு சில துறை அதிகாரிகளை வரும் 16ஆம் தேதி சென்னைக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2017-18ம் ஆண்டுகளில் வெள்ளகோவில் நகராட்சி நிதியை வங்கி கணக்கில் இருப்பு வைக்கும் போது டெபாசிட் செய்து வைக்காமல் சேமிப்பு கணக்கில் வைத்துள்ளனர். இதன் காரணமாக சுமார் 10 லட்சம் வரையிலான வட்டி இழப்பானது அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து முறையான விளக்கம் அளிக்கும்படி நகராட்சி ஆணையரை வரும் 16ம் தேதி சென்னைக்கு வர உத்தரவிட்டுள்ளோம். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெண்களுக்கான விடுதி கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதில் முறையான சுற்றுச்சுவர் கட்டப்படாமல் உள்ளது. மேலும் அந்த விடுதியில் குறைந்த அளவிலான பெண்கள் இருந்து வருகின்றனர். அந்த விடுதி அங்கு கட்டப்பட வேண்டிய அவசியமே இல்லை என்றும் இதற்காக ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் செலவு செய்து அங்கு விடுதி கட்டப்பட்டுள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.