திருப்பூரில் நடந்து வரும் அரசு திட்டப்பணிகள் குறித்து சட்டப்பேரவை பொது கணக்கு குழுவினர் ஆய்வு!

திருப்பூரில் மேற்கொள்ளப்படும் அரசு திட்டப்பணிகள் குறித்து சட்டப்பேரவை பொது கணக்கு குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து இந்த ஆய்வு குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.


திருப்பூர்: திருப்பூரில் மேற்கொள்ளப்படும் அரசு திட்டப்பணிகள் குறித்து சட்டப்பேரவை பொது கணக்கு குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து இந்த ஆய்வு குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.



திருப்பூரில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகள் குறித்து சட்டப்பேரவை பொது கணக்கு குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.



பின்னர் இந்த ஆய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.



ஆய்வுக் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை, மத்திய பொது கணக்கு குழு தணிக்கை செய்து கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் துறை வாரியாக இன்று திருப்பூரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வின் அடிப்படையில் இங்கு நடத்தப்பட்ட கூட்டத்தில் 33 தலைப்புகளில் (துறைகளில்) கேள்விகள் கேட்கப்பட்டது. தெளிவான விளக்கங்கள் அளிக்காத ஒரு சில துறை அதிகாரிகளை வரும் 16ஆம் தேதி சென்னைக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2017-18ம் ஆண்டுகளில் வெள்ளகோவில் நகராட்சி நிதியை வங்கி கணக்கில் இருப்பு வைக்கும் போது டெபாசிட் செய்து வைக்காமல் சேமிப்பு கணக்கில் வைத்துள்ளனர். இதன் காரணமாக சுமார் 10 லட்சம் வரையிலான வட்டி இழப்பானது அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து முறையான விளக்கம் அளிக்கும்படி நகராட்சி ஆணையரை வரும் 16ம் தேதி சென்னைக்கு வர உத்தரவிட்டுள்ளோம். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெண்களுக்கான விடுதி கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதில் முறையான சுற்றுச்சுவர் கட்டப்படாமல் உள்ளது. மேலும் அந்த விடுதியில் குறைந்த அளவிலான பெண்கள் இருந்து வருகின்றனர். அந்த விடுதி அங்கு கட்டப்பட வேண்டிய அவசியமே இல்லை என்றும் இதற்காக ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் செலவு செய்து அங்கு விடுதி கட்டப்பட்டுள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...