கோவையில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை: 17-வயது சிறுவன் உட்பட மூன்று பேர் கைது..!

மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 21-கிலோ கஞ்சா, ரூ.2-லட்சம் ரொக்கம், 2- இருசக்கர வாகனங்களை துடியலூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த 17-வயது சிறுவன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை துடியலூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக துடியலூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு கஞ்சாவை பயன்படுத்திய சில இளைஞர்களை பிடித்து விசாரித்தனர்.

விசாரணை அடிப்படையில் கோவை சரவணம்பட்டி, சூலூர் பள்ளபாளையம் பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு பிரதீப் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த விருதுநகரை சேர்ந்த லக்குச்சாமி (28), அஜித்குமார் (24) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவரையும் பிடித்து விசாரித்தனர்.அப்போது அவர்கள் சூலூரில் கடந்த 6 மாதமாக வாடகை வீட்டில் தங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து 17 வயது சிறுவன், மற்றும் லக்குசாமி, அஜித்குமார் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 21 கிலோ கஞ்சா, ரூ.2 லட்சம் ரொக்கம், 2 இரு சக்கர வாகனங்களை துடியலூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட லக்குசாமி மீது 2 கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதே போல் அஜித் குமார் மீது இருசக்கர வாகனம் திருட்டு வழக்கும் நிலுவையில் உள்ளது. இதையடுத்து மூவரையும் போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...