கோவையில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை: 17-வயது சிறுவன் உட்பட மூன்று பேர் கைது..!

மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 21-கிலோ கஞ்சா, ரூ.2-லட்சம் ரொக்கம், 2- இருசக்கர வாகனங்களை துடியலூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த 17-வயது சிறுவன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை துடியலூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக துடியலூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு கஞ்சாவை பயன்படுத்திய சில இளைஞர்களை பிடித்து விசாரித்தனர்.

விசாரணை அடிப்படையில் கோவை சரவணம்பட்டி, சூலூர் பள்ளபாளையம் பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு பிரதீப் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த விருதுநகரை சேர்ந்த லக்குச்சாமி (28), அஜித்குமார் (24) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவரையும் பிடித்து விசாரித்தனர்.அப்போது அவர்கள் சூலூரில் கடந்த 6 மாதமாக வாடகை வீட்டில் தங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து 17 வயது சிறுவன், மற்றும் லக்குசாமி, அஜித்குமார் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 21 கிலோ கஞ்சா, ரூ.2 லட்சம் ரொக்கம், 2 இரு சக்கர வாகனங்களை துடியலூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட லக்குசாமி மீது 2 கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதே போல் அஜித் குமார் மீது இருசக்கர வாகனம் திருட்டு வழக்கும் நிலுவையில் உள்ளது. இதையடுத்து மூவரையும் போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...