திருப்பூரில் பழைய பஸ் நிலையத்திற்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் என பெயர் சூட்டும் தீர்மானத்தை கண்டித்து மாநகராட்சி முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் பழைய பஸ் நிலையத்திற்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் என பெயர் சூட்டும் தீர்மானத்தை கண்டித்து மாநகராட்சி முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வரவிருக்கும், பழைய பஸ் நிலையத்திற்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் என பெயர் சூட்டும் தீர்மானம் திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே இத் தீர்மானத்தை கண்டிக்கும் வகையிலும், கலைஞர் பெயரை பேருந்து நிலையத்திற்கு வைக்க கூடாது என கோரியும், தியாகிகள் பெயரை வைக்க கோரியும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருப்பூர் மாநகராட்சி முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அக்கட்சியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.