கோவையில் சர்வதேச நாய்கள் மற்றும் பூனைகள் கண்காட்சி; ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர்

கண்காட்சியில், ராட்வீலர், பெல்ஜியன் ஷெப்பர்ட், பூடில், கிரேட் டேன், ராஜபாளையம், கோம்பை போன்ற நாய் இனங்களும், தமிழ்நாடு காவல்துறையின் மோப்ப நாய்களும் பங்கேற்றன. பல்வேறு இன நாய்கள் மற்றும் பூனைகளை பார்க்க குழந்தைகள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர்.


கோவை: கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வரும் சர்வதேச நாய்கள் மற்றும் பூனைகள் கண்காட்சியை ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக குழந்தைகள் கண்டுகளித்து வருகின்றனர்.



நடைபெற்று வரும், 18 வது சர்வதேச நாய்களுக்கான கண்காட்சியில், ராட்வீலர், பெல்ஜியன் ஷெப்பர்ட், பூடில், கிரேட் டேன், சிவாவா உள்ளிட்ட பல்வேறு இன நாய்களும், ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை போன்ற இந்திய நாய் இனங்களும் பங்கேற்றன.



அந்த நாய் இனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு காவல்துறையின் மோப்ப நாய்கள் பங்கேற்றது நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தது.



இதே போல, அதே இடத்தில் நடைபெற்ற பூனை கண்காட்சியில் பெர்சியன், பெங்கால், ஹிமாலயன், தேசி, சியாமிஸ், மீன் கூன் பூனைகள் போன்ற சுமார் 150 பூனைகள் கண்காட்சியில் பங்கேற்றன.



பஞ்சாப்பைச் சேர்ந்த நடுவர்கள் கோமல் தனோவா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த ஹரிஷ் படேல் ஆகியோர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற நாய் இனங்களின் தரத்தின் அடிப்படையில் மதிப்பிட்டனர்.

மேலும், சுதாகர் கடிகினேனி, ஆனி கரோல் மற்றும் டாக்டர் பிரதீப் ஆகியோர் பூனைகள் கண்காட்சியை மதிப்பீடு செய்து வெற்றிபெற்ற பூனைகளை அறிவித்தனர்.



பல்வேறு இன நாய்கள் மற்றும் பூனைகளை பார்க்க குழந்தைகள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...