பொள்ளாச்சி அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து!

பொள்ளாச்சி அடுத்துள்ள கோடங்கிபட்டி பகுதியில் தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கண் வயர், இரண்டு மோட்டார்கள் மற்றும் ஒரு பகுதி தென்னை நார் எரிந்து சாம்பலானது.


கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள கோடங்கிபட்டி பகுதியில் தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கண் வயர், இரண்டு மோட்டார்கள் மற்றும் ஒரு பகுதி தென்னை நார் எரிந்து சாம்பலானது.

பொள்ளாச்சி அடுத்த கோடங்கிபட்டியில் திருமலைசாமி என்பவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று பிற்பகல் தனியார் தொழிற்சாலையில் உள்ள கண் வயரில் உள்ள போல்ட் ஒன்று விழுந்துள்ளது. அதை சரி செய்வதற்கு வெல்டிங் அடிக்கும் போது அதிலிருந்து வந்த தீப்பொறி அருகிலிருந்த தென்னை நாரில் பட்டு தீப்பற்றி எரிய தொடங்கியது. உடனடியாக அங்கு வேலை செய்த நபர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். தென்னை நார் என்பதால் தீ மளமளவென பரவியது.

இதையடுத்து, இது குறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் கண் வயர், இரண்டு மோட்டார்கள் மற்றும் ஒரு பகுதி தென்னை நார் எரிந்து சாம்பலானது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...