பொள்ளாச்சி அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து!

பொள்ளாச்சி அடுத்துள்ள கோடங்கிபட்டி பகுதியில் தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கண் வயர், இரண்டு மோட்டார்கள் மற்றும் ஒரு பகுதி தென்னை நார் எரிந்து சாம்பலானது.


கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள கோடங்கிபட்டி பகுதியில் தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கண் வயர், இரண்டு மோட்டார்கள் மற்றும் ஒரு பகுதி தென்னை நார் எரிந்து சாம்பலானது.

பொள்ளாச்சி அடுத்த கோடங்கிபட்டியில் திருமலைசாமி என்பவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று பிற்பகல் தனியார் தொழிற்சாலையில் உள்ள கண் வயரில் உள்ள போல்ட் ஒன்று விழுந்துள்ளது. அதை சரி செய்வதற்கு வெல்டிங் அடிக்கும் போது அதிலிருந்து வந்த தீப்பொறி அருகிலிருந்த தென்னை நாரில் பட்டு தீப்பற்றி எரிய தொடங்கியது. உடனடியாக அங்கு வேலை செய்த நபர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். தென்னை நார் என்பதால் தீ மளமளவென பரவியது.

இதையடுத்து, இது குறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் கண் வயர், இரண்டு மோட்டார்கள் மற்றும் ஒரு பகுதி தென்னை நார் எரிந்து சாம்பலானது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...