கோவையில் கே.ஜி சாவடி அருகில் உள்ள மளிகை கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.48 ஆயிரம் மதிப்புள்ள 21 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை: கோவையில் கே.ஜி சாவடி அருகில் உள்ள மளிகை கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.48 ஆயிரம் மதிப்புள்ள 21 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை கே.ஜி சாவடியை அடுத்த காளியாபுரம் பகுதியை சேர்ந்தவர் பத்ரிநாத் (37). இவர் அதே பகுதியில் விக்னேஸ்வரா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து கே.ஜி சாவடி போலீசார் இன்று மாலை அங்கு சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் அவரது மளிகை கடையில் இருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் ரூ.48 ஆயிரம் மதிப்புடைய 21 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து பத்ரிநாத்தை கைது செய்த கே.ஜி சாவடி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை கே.ஜி சாவடியை அடுத்த காளியாபுரம் பகுதியை சேர்ந்தவர் பத்ரிநாத் (37). இவர் அதே பகுதியில் விக்னேஸ்வரா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து கே.ஜி சாவடி போலீசார் இன்று மாலை அங்கு சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் அவரது மளிகை கடையில் இருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் ரூ.48 ஆயிரம் மதிப்புடைய 21 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து பத்ரிநாத்தை கைது செய்த கே.ஜி சாவடி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.