கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - கேரளா இளைஞர் கைது!

கோவையிலிருந்து வாளையார் பகுதி வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், பிடிபட்ட ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் பாதுகாப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.



கோவை: கோவையிலிருந்து வாளையார் பகுதி வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், பிடிபட்ட ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் பாதுகாப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவையில் இருந்து வாளையார் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கே ஜி சாவடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கே ஜி சாவடி உதவி ஆய்வாளர் சரவணன், சிறப்பு உதவி ஆய்வாளர் தனசேகரன் உள்ளிட்ட போலீசார் வாளையார் சர்வீஸ் சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவையில் இருந்து வந்த வாடகை ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் மூட்டை மூட்டைகளாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஆட்டோவை ஓட்டி வந்த ஓட்டுநரை பிடித்து விசாரித்ததில், அவர் கேரள மாநிலம் பாலக்காடு வட்டப்பர பகுதியை சேர்ந்த ரங்கன் மகன் சிவன் (24) என்பது தெரியவந்தது. மேலும் இவர் கோவை உக்கடம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மலிவு விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.



இதையடுத்து சிவனை கைது செய்த போலீசார் ஆட்டோவில் இருந்த சுமார் 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட சிவன் மற்றும் பிடிபட்ட ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் பாதுகாப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...