கோவையிலிருந்து வாளையார் பகுதி வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், பிடிபட்ட ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் பாதுகாப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கோவை: கோவையிலிருந்து வாளையார் பகுதி வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், பிடிபட்ட ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் பாதுகாப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கோவையில் இருந்து வாளையார் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கே ஜி சாவடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கே ஜி சாவடி உதவி ஆய்வாளர் சரவணன், சிறப்பு உதவி ஆய்வாளர் தனசேகரன் உள்ளிட்ட போலீசார் வாளையார் சர்வீஸ் சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவையில் இருந்து வந்த வாடகை ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் மூட்டை மூட்டைகளாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆட்டோவை ஓட்டி வந்த ஓட்டுநரை பிடித்து விசாரித்ததில், அவர் கேரள மாநிலம் பாலக்காடு வட்டப்பர பகுதியை சேர்ந்த ரங்கன் மகன் சிவன் (24) என்பது தெரியவந்தது. மேலும் இவர் கோவை உக்கடம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மலிவு விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து சிவனை கைது செய்த போலீசார் ஆட்டோவில் இருந்த சுமார் 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட சிவன் மற்றும் பிடிபட்ட ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் பாதுகாப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.