கோவை தனியார் பேருந்தில் ரூ.1 கூடுதல் கட்டணம் வசூல் - பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு.

தனியார் பேருந்தில் நிர்ணயக்கப்பட்ட கட்டண தொகையை விட ரூ. 1 அதிகமாக வசூல் செய்வதாக, பயணி ஒருவர் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், பாதிக்கபட்ட பயணிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.


கோவை: தனியார் பேருந்தில் நிர்ணயக்கப்பட்ட கட்டண தொகையை விட ரூபாய். 1 அதிகமாக வசூல் செய்வதாக, பயணி ஒருவர் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், பாதிக்கபட்ட பயணிக்கு ரூபாய். 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சின்ராஜ் (26). கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20-ந் தேதி, கோவை இரயில் நிலையத்தில் இருந்து சிங்காநல்லூருக்கு செல்ல "மேனகா" டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் பேருந்தில் பயணித்துள்ளார்.

அப்போது, அந்த பேருந்தில் ரூ.5 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதற்கு சின்ராஜ், மற்ற பேருந்துகளில் ரூ.4 தானே கட்டணம், நீங்கள் ஏன் கூடுதலாக ஒரு ரூபாய் வசூலிக்கிறீர்கள்..?என்று கேட்டு உள்ளார். அதற்கு அந்த பேருந்து நடத்துநர், டிக்கெட் விலையை உயர்த்தி விட்டோம். ரூ.5 தான் கட்டணமாக வசூலிக்கிறோம், என்று பதில் அளித்துள்ளார்.

இதையடுத்து, அவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி, அதே பேருந்தில் சிங்காநல்லூரில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு பயணித்துள்ளார்.அப்போதும், ரூ.4-க்கு பதிலாக ரூ.5 கட்டணம் வசூலித்து உள்ளனர்.

உடனே, இது குறித்து சின்ராஜ் அந்த தனியார் பேருந்துநிறுவனத்துக்கு கடிதம் எழுதி, தன்னிடம் வசூலித்த கூடுதல் கட்டணத்தை திரும்ப செலுத்துவதுடன், கூடுதல் கட்டணம் வசூலித்ததற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும், என்று வலியுறுத்தி இருந்தார்.

ஆனால், அந்த நிறுவனம் சார்பில் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சின்ராஜ் கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தன்னிடம் 3 முறை கூடுதலாக வசூலித்த கட்டணம் ரூ.3 மற்றும் மன உளைச்சலுக்காக ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், என்று கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல், தனியார் பேருந்து நிறுவனத்தில் சேவை குறைபாடு இருப்பது உறுதியானதால், சின்ராஜிக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம், அவரிடம் இருந்து வசூலித்த கூடுதல் டிக்கெட் கட்டணமன ரூ.3 மற்றும் வழக்கு செலவு ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும், என்று தீர்ப்பு வழங்கினார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...